ஓசை அமைப்பின் சார்பில் "சூழல் சந்திப்பு" நிகழ்ச்சி


ஓசை அமைப்பின் சார்பில் இவ்வாண்டின் இறுதி  "சூழல் சந்திப்பு" மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதுரில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக Dr.ஈ.விஜயராகவன் கலந்துக் கொண்டு வனவிலங்குகள் மீட்பு பணியில் எனது அனுபவங்கள் என்ற தலைப்பில் மீட்பு பணி குறித்த அனுபவங்களை  பகிர்ந்துகொண்டார். இவ்விழாவிற்கு ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் சண்முகசுந்திரம் தலைமை தாங்கினார். 



முன்பாக மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் முதல்வர் அம்மா அவர்கள் வன பதுகாப்பாளர்களுக்கு வாகன வசதி செய்து கொடுத்தும், யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இயற்கையை பாதுகாப்பதில் பெருந்துணையாக இருந்தார் எனவும் கூறினர்.. மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்ற வண்ணதாசன் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.



இதுகுறித்து ஓசை அமைப்பின் செய்யது அவர்கள் கூறுகையில், வர்தா புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் வெளிநாட்டு மரங்கள்,எனவே வெளிநாட்டு மரங்களை தவிர்த்த மண் சார்ந்த நாட்டு மரங்களை நட வேண்டும் எனவும், பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறினார். 



இந்நிகழ்ச்சியில் தன்னார்வு தொண்டர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...